"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு

நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
x
நீதிமன்ற வழக்கு காரணமாக,  திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வழக்கை தொடர்ந்திருந்த சரவணன் இந்த முறையீட்டை முன்வைத்துள்ளார். அதிமுக சார்பாக ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து சரவணன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இந்த கோரிக்கையை சரவணன் முன் வைத்தார். இதையடுத்து, விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்