முன்கூட்டியே முடிகிறதா, பள்ளித் தேர்வுகள்? - சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக தகவல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்கூட்டியே முடிகிறதா, பள்ளித் தேர்வுகள்? -  சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாக தகவல்
x
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடப்பதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த சுற்றறிக்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 10,11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதிலோ, முடிவுகள் வெளியிடுவதிலோ எந்த வித பிரச்னையும் இல்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவிற்கு அடுத்த நாளான ஏப்ரல் 19ம் தேதி, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வெளியாகிறது. இதில் எந்த சிக்கலும் எழாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்