ரயில் தண்டவாளம் அருகே வெடித்த நாட்டு வெடிகுண்டு : மதுரையில் பரபரப்பு

மதுரை ரயில் தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மதுரை - போடி ரயில் பாதை அருகே நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மர்மமான முறையில் கிடந்த இந்த நாட்டு வெடிகுண்டானது ரயில் தண்டவாளம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். இதையடுத்து தடயங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்