திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை

திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை
x
கடந்த 2018ல் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் ஸ்டாலின் கருத்து தெரிவித்ததாக அவர் மீது அரசு தரப்பில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தலுக்காக தான் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் வழக்கு விசாரணைக்கு தடைவிதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேசசாயி  திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், நேரில் ஆஜராக விலக்களித்தும் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்