ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி

ஏழைத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
x
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்துக்கு தடை கோரி, விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே, சிறப்பு நிதி தொடர்பான அரசாணையை திருத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்