"நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசினால் எப்படி?" - நகராட்சி ஆணையரை கடிந்து கொண்ட அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகராட்சி ஆணையரை கடுமையாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
x
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகராட்சி ஆணையரை கடுமையாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பழனியில் துப்புரவு பணியாளர்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் துப்புரவு வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி ஆணையர் அறையில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது நகராட்சி ஆணையர் நாராயணனிடம் நேரி்ல் வந்து பார்க்காமல் தொலைபேசியில் பேசினால் எப்படி? என கடிந்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்