முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

கால்நடைகளின் கழுத்தில் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அணிவிக்க கோரிய வழக்கில் பதிலளிக்க நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதி - நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
x
நெல்லை மாவட்டத்தில் முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாகவும், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உரிமையாளர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண் அடங்கிய தகவலை கால்நடைகளின் கழுத்தில் அணிவித்தால் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றும், கொம்புகளில் சிவப்பு, மஞ்சள் நிற பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும் என்றும், நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்