கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நோய் பாதிப்புக்கு தீர்வு காண நடவடிக்கை

ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தில் குடிநீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.
கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நோய் பாதிப்புக்கு தீர்வு காண நடவடிக்கை
x
ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தில் குடிநீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டு காலமாக சுகாதாரமற்ற குடிநீரை குடித்து வந்ததால் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வந்தனர். இதற்கு தீர்வு காண தனியார் நிறுவனம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் 21 குடிநீர் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக  தனியார் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்