"எந்த உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றியது இல்லை" - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

எந்த உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றியது இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
எந்த உத்தரவையும் ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றியது இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
x
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனு இன்று  நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தார். அப்போது,  'நாட்டில் பணக்காரர்கள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே இருப்பதாகவும், அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என விட்டு விட முடியுமா? என்ற வாதத்தை முன்வைத்தார். ஸ்டெர்லைட் ஆலை இன்று வரை எந்த உத்தரவையும் பின்பற்றியது இல்லை என்றும் வாதிட்ட நிலையில் அலுவல் நேரம் முடிந்ததால் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்