ஸ்டெர்லைட் வழக்கு : மாவட்ட எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
ஸ்டெர்லைட் வழக்கு : மாவட்ட எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
x
* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய்வழக்கு பதிவதை தடுக்க கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*போராட்டத்திற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி காவல்துறையினர் அலைக்கழிப்பதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டத்துக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு ?. எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது  என மாவட்ட  எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்