"பொன்.மாணிக்கவேலுக்கு தடை இல்லை" - உச்சநீதிமன்றம்

சிலை கடத்த தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
x
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, தமிழக காவல்துறையை சேர்ந்த எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி உள்பட 66 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பொன்.மாணிக்கவேல் சிறப்பாக பணியாற்றவில்லை என்றும் தன்னை புகழ்ந்து கொள்வதை முன்னிலைப்படுத்தியதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சிறப்பான அதிகாரிகள் இருக்கும் போது, சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றக் கோரியது ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர், பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்