ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், அதன் முதன்மை ஆணையர் அபில்தாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.
ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்
x
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், அதன் முதன்மை ஆணையர் அபில்தாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். தொடர்ந்து சிறப்பு உரையாற்றிய அவர், கடந்த 6 மாதத்தில் மட்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்