மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
x
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே இலந்தக்குட்டையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி பகுதிகளில் தடையின்றி சீரான மின் வினியோகத்திற்காக 17 ஆயிரம் மின் வினியோக பெட்டிகள் வாங்கப்படும் என்று கூறினார்.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்