ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்த 18 வயது இளைஞர் : கையும் களவுமாக பிடித்த மத்திய அரசு ஊழியர்

திருவனந்தபுரம் கோரக்பூர் ராப்திநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயிலில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்த 18 வயது இளைஞர் : கையும் களவுமாக பிடித்த மத்திய அரசு ஊழியர்
x
திருப்பூரில் ஏறிய மத்திய அரசு ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவரிடம் தன்னை டிடிஆர் என அறிமுகம் செய்துகொண்ட நபர் ஒருவர் அவரது டிக்கெட்டுகளை பரசோதனை செய்ய வாங்கியுள்ளார். டிக்கெட்டுகளை வாங்கிய நபர் அடுத்த ரயில் பெட்டிக்கு செல்ல முயன்றதால், சந்தேகம் அடைந்த ஜெயச்சந்திரன், அவரிடம் டிடிஆர் அடையாள அட்டைகளை காண்பிக்கும் படி கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரும் சில ஆவணங்களை காண்பிக்க, அவை அனைத்தும் போலியானவை என்பதை உறுதி செய்த ஜெயச்சந்திரன், அவரை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் சுதிர் என்பதும், விஷாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்