அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..

வேலூர் ஆபீஸ் சர்ச் சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை விசுவாசம் படம் நள்ளிரவில் திரையிடப்பட்டது.
அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..
x
வேலூர் ஆபீஸ் சர்ச் சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை விசுவாசம் படம் நள்ளிரவில்  திரையிடப்பட்டது.  ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில்  ரமேஷ், பிரசாந்த் ஆகியோரை 4 பேர் கொண்ட  கும்பல் கடுமையாக தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளனர். காயம் அடைந்து அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நடிகர் அஜித் பார்க்க வருவதாக தகவல் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். அஜித் வரமாட்டார் என போலீசார் கூறி  , கலைந்து செல்ல   அறிவுறுத்தினர்.  6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்