கிராமத்து இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடிய வைகோ

வைகோ, இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
x
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி. ஆண்டு முழுவதும் வெளியூரில் இருந்தாலும் வைகோ பொங்கல் பண்டிகை​யின் போது 4 நாட்கள் சொந்த ஊரில் இருப்பது வழக்கம்.இந்த 4 நாட்களும் கலிங்கப்பட்டியில் விளையாட்டு போட்டிகள், கவியரங்கம், பாடல் கச்சேரி, பட்டிமன்றம் என விழா கோலம் தான் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். விளையாட்டு போட்டிக்காக  வலைப்பயிற்சியில் கிராமத்து இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர். வைகோ தலைமையிலான அணியும் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இளைஞர்களுக்கு சரிசமமாக போட்டி போட்டு பந்தை விளாசும் காட்சி கட்சியினர் மட்டுமின்றி கிராம மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்