தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
x
ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ் செல்வன் தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேகமலை சரணாலயத்திற்காக, வெள்ளிமலை, அரசரடி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்களை வெளியேற்றும் உத்தரவை வனத்துறை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

Next Story

மேலும் செய்திகள்