ஜல்லிக்கட்டு ஏற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

அலங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
x
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அலங்காநல்லூர் வந்த மாவட்ட ஆட்சியர் நடராஜன், வாடிவாசல், காளைகளுக்கான மருத்துவ  பரிசோதனை இடம், வழித்தடம், தடுப்பு வேலி அமைப்பது, பார்வையாளர்கள் மடம், உணவு, குடிநீர் மற்றும் பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முழுவீச்சில் பணிகளை மேற்கொள்ள வருவாய், மருத்துவம், தீயணைப்பு ஆகிய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், அவனியாபுரம், பாலமேட்டிலும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்