இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
x
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதன்பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்தில், பேரவையை வரும் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபால், 3ஆம் தேதி மறைந்த உறுப்பினர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து 4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்குவதாகவும், தொடர்ந்து 8ஆம் தேதி வரை அவை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்