2015ம் ஆண்டு முதல் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 28 சிலைகள் மீட்பு...

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 28 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 28 சிலைகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவில் இருந்து மட்டும் 21 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 சிலைகளும், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு சிலையும் மீட்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட விநாயகர், மாணிக்கவாசகர், உமா பரமேஸ்வரி, சோழர் காலத்து ஸ்ரீதேவி சிலைகளும், பார்வதி, துர்கா உள்ளிட்ட 9 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்