ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் இருப்புவைப்பு -மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலையின் ஆய்வில் அம்பலம்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் இருப்புவைப்பு -மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலையின் ஆய்வில் அம்பலம்
x
நாமக்கல் அரசு மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவரான அவர், நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகள் காலாவதியாக இருப்பதை பார்த்த அவர், உடனடியாக அவற்றை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செம்மலை, மருந்துகள் மக்களுக்கு பயன்படும் வகையில் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார். தமிழ்நாடு மருத்துவக் கழகம் அனுப்பியுள்ள காலாவதியான 7  லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட அவர், இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்