குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
* குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ரமணா, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்,  தூத்துக்குடி ஆய்வாளர் சம்பத் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. 

* இந்த நிலையில், குட்கா வியாபாரி மாதவ்ராவ் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் பட்டியலில் உள்ள போலீஸ் உயரதிகாரிகளிடம் ஜனவரியில் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* டெல்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு, தேவையான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குட்கா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்