கஜா புயலில் வீழ்ந்த தென்னை மரங்களை இருக்கைகளாக மாற்றிய இளைஞர்கள்

புதுக்கோட்டை அருகே புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களை இருக்கைகளாக மாற்றிய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
x
கஜா புயலால் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த தென்னை மரங்களுக்கு புது வடிவம் கொடுத்துள்ளனர். விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை எல்லாம் சரியான அளவில் வெட்டி அதை இருக்கைகள் போல வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு அழகிய வடிவம் தரும் இந்த இருக்கைகள் கிராம மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் விளைநிலங்களில் கிடக்கும் குப்பைகளையும் அந்த இளைஞர்கள் அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்