மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்

திருச்சி அருகே மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் - தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம்
x
திருச்சி அருகே மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர், புதுப்பட்டியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக நடத்துனர் முருகனுக்கும், மனைவி கோமதிக்கும் இடையே புதிய வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.  இந்நிலையில்  இன்று அதிகாலை முருகனின் மனைவி துாக்கில் தொங்கிய நிலையிலும்,  அருகில் மகன் சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்