பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...

தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழகத்தில் ஜனவரி முதல் தேதியில் இருந்து மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து அரசு  அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தனியார் நிறுவனம்  தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் மேலாண்மை சட்ட விதி படி பிளாஸ்டிக் பயன்பாட்டை   மத்திய அரசு தான் தடை செய்யவோ அல்லது ஒழுங்குமுறைப் படுத்துவோ முடியும் என்றும்,  தமிழக அரசு பிறபித்த அரசாணை தெளிவாக இல்லை எனவும்  மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு,  அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு தள்ளிவைத்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எந்த தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்