சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்

சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறுவயதில் 3 முறை பாலியல் கொடுமை - 13 வருடங்களுக்கு பின் பெண் போலீசில் புகார்
x
சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி பட்டதாரி பெண் ஒருவர் 13ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீ டு இயக்கம் மூலம் சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. பிரபலங்கள் பலர் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த ஜனனி என்ற பெண்,  சிறுவயதில் தன்னை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய மாமா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொறியல் பட்டதாரியான அப்பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு கணவரோடு சேர்ந்து வாழ முடியாமல் விவகாரத்து பெற்றுள்ளார். தன்னை 3 முறை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய திருப்பூரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் மாமா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பெண் 13 ஆண்டுகளுக்கு பின்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்