கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...
x
சென்னை :

கஜா புயல் நிவாரண நிதிக்காக சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சி மூலம்  கிடைக்கும் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.  

பெரம்பலூர் : 

பெரம்பலூரில் ரித்திகா என்ற 5 வயது சிறுமி, தான் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த ஆயிரத்து 421 ரூபாய் பணத்தை கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அளித்துள்ளார்.  

திருவண்ணாமலை : 

இதேபோல், கஜா புயல் நிவாரணத்திற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அண்ணன், தங்கையான  வேங்கடசேஷாத்திரி மற்றும் ராஜஸ்ரீநிதி ஆகிய சிறுவர்கள், தாங்கள் மடிக்கணினி வாங்குவதற்கு சேமித்து வைத்த 6 ஆயிரத்து 725 ரூபாய் பணத்தை ஆட்சியரிடம் வழங்கினர்.  

நெல்லை :

 கஜா புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு நெல்லை மாவட்டம் மேலகரம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திரட்டிய 2 லட்சம் ரூபாய் நிதி, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்