கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
x
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் 450 குடும்பங்களுக்கு, லண்டனில் உள்ள தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது. இந்த பொருட்களை, கருணாஸ் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்