"பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்

பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவிற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுவிற்கு,  தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், லோக் ஆயுக்தா அமைப்பு குறித்து திமுக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அந்த அமைப்பிற்கு பல் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து, அமைப்பு செயல்படும்போது தான் தெரியும் என்றார். லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்