மத்திய அரசு ரூ.25,000 கோடி நிவாரணம் தர வேண்டும் - வைகோ

மத்திய அரசு ரூ.25,000 கோடி நிவாரணம் தர வேண்டும் - வைகோ
x
கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டார். சுமார் 10 ஏக்கரில் பயிரிட்டிருந்த தென்னை மரங்கள் முற்றிலும் நாசமடைந்ததால், மனவேதனை அடைந்த அவர், இந்த முடிவை எடுத்தார். இந்நிலையில், திருச்செல்வம் வீட்டிற்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விவசாயி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம்  வழங்க வேண்டும் எனவும், விவசாய கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்