இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார் செல்கிறார் முதலமைச்சர்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ஆம் தேதி பார்வையிட்டார். அப்போது பெய்த கடுமையான மழையின் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அவர் செல்லவில்லை. இந்த நிலையில் விடுபட்ட இந்த 2 மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் திருவாரூருக்கு செல்கிறார். தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் அவர் ஆய்வு நடத்த உள்ளார்.
Next Story