விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்

விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்
x
புயல்வெள்ள சேதங்களை பார்வையிட வந்த துணை முதலமைச்சரை சந்திக்க வந்த புதுக்கோட்டை காந்திநகர் பகுதி மக்களை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நிவாரணமும் கிடைக்கவில்லை, 8 நாட்களாக மின்சாரமும் இல்லை என்ற படியே மக்கள் திரும்பிச் சென்றனர்.  இதனைப் பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், போலீசாரால் விரட்டப்பட்ட மக்களை மீண்டும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை காண அழைத்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பொது மக்கள் அவரிடம் தெரிவித்தனர். 15 நிமிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  இதனால் முன்பு போலீசாரால் விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்