துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார். கந்தவர்கோட்டை அருகே சென்ற போது, அங்கிருந்த பொதுமக்கள் துணை முதலமைச்சர் சென்ற வாகனத்தை மறித்தனர். காரில் இருந்து கீழே இறங்கிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுமார் 20 நிமிடம் பேசி மக்களை சமாதானம் செய்தார். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்படும், உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்