கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை

கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
கஜா புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசனை
x
கஜா  புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், பல்வேறு துறைகள் சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மீட்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்