35 ஆண்டுக்கு பின்னர் பெருமாள் தாயார் வீதிஉலா

திருவிடைமருதூர் நாச்சியார்கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் தாயார் வீதிஉலா நடைபெற்றது.
35 ஆண்டுக்கு பின்னர் பெருமாள் தாயார் வீதிஉலா
x
திருவிடைமருதூர் நாச்சியார்கோயிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் தாயார் வீதிஉலா நடைபெற்றது. கடந்த 2 ஆம் தேதி   மணவாள மாமுனிகள் உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான ஞாயிறு மாலை பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.  35 ஆண்டுகளுக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்டோர் பெருமாள் ,தாயாரை தோளில் சுமந்து வீதி உலா சென்றனர். வழி நெடுக அர்ச்சனை செய்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெருமாள் தாயாருக்கு முன்பாக மணவாள மாமுனிகள் படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்