இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இன்று குரூப்-2 தேர்வு : 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்  குரூப் 2  எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும்  6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்.

இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வின் போது காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்