பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாசன கால்வாய் ஒன்று காணவில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக பள்ளிபாளையத்திற்கு பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் 5 கிளைகளாக பிரிந்து, பழனியப்பா நகர், லக்ஷ்மி நகர், கொல்லம்பாளையம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக விவசாயம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்த நிலையில் தற்போது கால்வாய், காணவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

Next Story

மேலும் செய்திகள்