கோவை : டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி

கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவை : டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி
x
கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கோவை புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த கவிதா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்