கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாஸின் ஓட்டுநர் தற்கொலை முயற்சி
x
நெல்லை மாவட்டம்  நாங்குநேரியில் எம்.எல்.ஏ கருணாஸின் கார் ஓட்டுநர் மற்றும் அவரின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருணாஸின் கார் ஓட்டுநரான நாங்குனேரியை சேர்ந்த கார்த்திக், கருணாஸ் கைது செய்யப்பட்ட போது , அவரது நண்பர்கள் சாமிதுரை ,சுப்பையா ஆகியோருடன் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்ததற்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்நிலையில் போலீசார் தங்களை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதாக கூறி மூவரும் காவல்நிலையம் முன்பு மண்ணென்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்