மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்

10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர், 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்
x
தஞ்சாவூர் மாவட்டம் கருத்தட்டான்குடியைச் சேர்ந்த நாடிமுத்துவும், அவரின் சகோதரர் முத்துக் குமாரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சாகுல்ஹமீது உள்ளிட்ட 8 பேரிடம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர். கடந்த 1998ஆம் ஆண்டில் பணம் பெற்ற அவர்கள், வேலை வாங்கித் தராததால், சாகுல் ஹமீது போலீசில் புகார் அளித்திருந்தார். 

நாடிமுத்துவை காரைக்குடியில் 1999ஆம் ஆண்டில் போலீசார் கைது செய்த நிலையில், முத்துக்குமார் தலைமறைவாகி விட்டார். கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முத்துக்குமாரை, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவரை சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்