"சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்" - அமைச்சர் சரோஜா

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.
சத்துணவு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் சரோஜா
x
குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* தமிழகத்தில் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 51 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 

* தமிழகத்தில் உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 3 சதவீதம் சம்பள உயர்வுடன் சிறப்பு காலமுறை சம்பளம் வழங்கப்பட்டதோடு, 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று சம்பளம் உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* தமிழகத்தில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளதாகவும், இந்த பணியிடம் மற்ற மாநிலங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

* ஓய்வு பெற்ற 54 ஆயிரத்து 340 சத்துணவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஆயிரத்து 500ல் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சத்துணவு பணியாளர்களின் சம்பளம், மற்ற படிகள் உள்ளிட்ட நிர்வாக செலவுக்கு 58 சதவீதத்தை அரசு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

* எனவே லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் சரோஜா வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்