மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி - பொதுமக்கள் பீதி

மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி - பொதுமக்கள் பீதி
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி - பொதுமக்கள் பீதி
x
மதுரை திருப்பரங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநகரில் வசித்து வரும் ஸ்ரீதர் என்பவரது மகள் ஐஸ்வர்யா 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். திருநகரில் கடந்த பல மாதங்களாக சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வரும் நிலையில், மர்ம காய்ச்சலுக்கு மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பன்றி காய்ச்சலுக்கு பொறியாளர் பலி



கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கோபிநாத் என்ற  பொறியாளர், பன்றி காய்ச்சலால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கோபிநாத்துக்கு  காய்ச்சல் குறையாததால், அவரை புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கோபிநாத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்