உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்

முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்
x
முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் எனவும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்