நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் : சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க உத்தரவு
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
* நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது திமுகவின் மனு குறித்து ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஊழல் கண்காணிப்பு ஆணையர் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் எனவும் காவ ல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
*லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
* அந்த விசாரணை அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
* இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்த ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..
Next Story