குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா வழக்கு : எஸ்.பி.யிடம் விசாரணை
x
குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் மற்றும் அமலாக்கத்துறை இய​க்குநர் ஷெரோன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக இருவரிடமும் காலை 10.30 முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்