கனமழை காரணமாக நிரம்பி வழியும் கண்மாய் : 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் செல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி, வெள்ளநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.
கனமழை காரணமாக நிரம்பி வழியும் கண்மாய் : 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
x
மதுரையில் தொடரும் மழை காரணமாக செல்லூர், ஆணையூர், கூடல்புதூர் கண்மாய்கள் நிரம்பின. அங்கிருந்து வெளியேறும் மழைநீர் பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை அணைக்கு கலப்பது வழக்கம். தற்போது பந்தல்குடி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்தல்குடி கால்வாயையை மழைக்கு முன்னரே தூர்வாரி இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறினர். 
 

Next Story

மேலும் செய்திகள்