"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்?" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி

லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, லஞ்சம் கொடுப்பவர்களும் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்? - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி
x
மதுரையில்,  ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை இயக்கம் சார்பாக தமிழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் தமிழில் கையெழுத்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ஆங்கிலம் என்பது பிழைப்பிற்கான மொழி மட்டுமே என்றும், அதன் மீதான மோகத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்