தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து

நாடு முழுவதும் 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் ஒ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து
x
இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நடந்தது. இதில் வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதன்படி இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 தனியார் நிறுவனங்கள், 4 அரசு நிறுவனங்கள் என மொத்தம் 6 நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் 55 இடங்களில் 41 இடங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 இடங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு இடம் ஓஎன்ஜிசிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நிலப்பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கதான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 இடங்களும் கடற்பகுதியில் இருப்பதால் பிரச்சினை இருக்காது. காவிரி அருகே உள்ள கடற்பகுதியில் இருந்து தான் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். 

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குழப்பம் 



ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 இடமும் கடற்பகுதியில் இருப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசின் ஆவணத்தில் ஒரு இடம் நிலப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் நீடிக்கிறது. 



Next Story

மேலும் செய்திகள்