ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை

சென்னை - சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்பீர் ஷா என்பவர் வீட்டில் சிலை தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 56 தொன்மை வாய்ந்த சிலைகளும், ஏராளமான கல் தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் - ஐஜி பொன் மாணிக்கவேல் வேதனை
x
சிலை தடுப்பு பிரிவு ஐஜி - பொன் மாணிக்கவேல் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அதிகாலை முதல் பல மணி நேரம் நடத்திய சோதனையில் தோண்ட தோண்ட, தொன்மைவாய்ந்த சிலைகளும், அபூர்வ கல் தூண் , கலைசிற்பங்களும் சிக்கின. இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி - பொன் மாணிக்கவேல், இது முழுக்க முழுக்க கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்றார். ஒரு கோவிலையே மொட்டை போட்டு விட்டார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்