மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...

சேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.
மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...
x
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, மனைவி பூமதி , குழந்தைகள் மீது  ஊற்றித் தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பூமதியும், மகள் நிலாவும், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறப்பதற்கு முன்னர், பூமதி அளித்த மரண வாக்குமூலத்தில், கணவர் கார்த்திக், மதுபோதையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்தார். இதனையடுத்து, ஆத்தூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த சம்பவத்தில், சிறுவன் பூவரசன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 


Next Story

மேலும் செய்திகள்